search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய்வசந்த் எம்.பி."

    • நாகர்கோவிலை அடுத்த புது கிராமம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலை அடுத்த புது கிராமம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டு தேரூர் பேரூராட்சி புதுகிராமம் 1-வது வார்டில் அங்கன் வாடி கட்டும் பணி நடந்து முடிந்தது. இதையடுத்து அதன் திறப்பு விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    முன்னதாக டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம், வட்டார தலைவர் காலபெருமாள், குமரி கிழக்கு மாவட்ட எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் ஜோயல், தங்கம் நடேசன், தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதா ராணி வின்சென்ட், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பென்னி கிரகாம் மற்றும் தேரூர் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • தேவாலயத்தின் பங்கு தந்தையை சந்தித்து ஆசி பெற்றார்.
    • மாவட்ட, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10ம் திருவிழாவையொட்டி தங்கத் தேர் பவனியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார். 


    தொடர்ந்து புனித அலங்கார உபகார மாதா தேவாலயத்தின் பங்கு தந்தை அருட் பணி ஆன்றணி அல்காதர் அவர்களை சந்தித்த அவர் ஆசி பெற்றார். 


    நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள், மாநில பொது குழு உறுப்பினர்கள், வட்டார, மாவட்ட, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் இந்த தொழிலையே நம்பி உள்ளனர்
    • குமரி மீனவர்கள் சங்கு குளிக்கும் சீசனில் தூத்துக்குடி சென்று தொழில் செய்கின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை ஆகிய கடலோர கிராமங்களை சேர்ந்த சங்கு குளிக்கும் மீனவர்கள் கோடிமுனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய்வசந்த் எம்.பி.யை சந்தித்து மனு அளித்தனர்.

    அதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சங்கு குளிக்கும் மீனவர்கள் பாரம்பரியமாக தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடல் பகுதியில் சங்கு குளிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் இந்த தொழிலையே நம்பி உள்ளனர்.இதனால் குமரி மீனவர்கள் சங்கு குளிக்கும் சீசனில் தூத்துக்குடி சென்று தொழில் செய்கின்றனர். தொழில் ரீதியாக குமரி மீனவர்கள் தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர்களுடன் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை மீனவர்கள் தொழிலுக்கு செல்லும்போது ஒரு சில மீனவர்கள் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி இங்கு நீங்கள் தொழில் செய்யக்கூடாது என விரட்டி உள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.காலங்காலமாக செய்து வரும் எங்கள் தொழில் கேள்வி குறியாகி உள்ளது. எனவே குமரி மீனவர்கள் தொடர்ந்து திரேஸ்புரத்தில் சங்கு குளிக்கும் தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், குமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங்.தலைவர் ஸ்டார்வின், துணைத்தலைவர் லாலின் மற்றும் ஊராட்சி காங்.நிர்வாகிகள் ஆகியோர் மனு கொடுக்கும் போது உடனிருந்தனர்.

    • சுற்றுலாத் திட்டங்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
    • அந்தோணியார் குருசடியில் மாலை அணிவித்து வணங்கினார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட சுனாமி குடியிருப்புக்கு வருகை தந்த விஜய்வசந்த் எம்.பி. அவர்களுக்கு ஊர் மக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

    அங்கு உள்ள சார்ஜியார் குருசடியில் மாலை அணிவித்து வணங்கி அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார். அங்கு வசிக்கும் பொது மக்கள் தங்களுக்கு போதிய சாலை வசதி இல்லை, மழைக்காலத்தில் தெருக்களில் மழை நீர் தேங்கி பெரிதும் பாதிக்கப்ப டுவதாக கூறினர். இதனை விரைவில் சரிசெய்து தருவ தாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.

    பின்பு கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியில் பொதுமக்களை சந்தித்த விஜய்வசந்த் எம்.பி.யை ஊர் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அங்குள்ள முத்தாரம்மன் திருக்கோவிலின் பின்பு றம் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நிகழ்ச்சி நடக்கும்போது உணவு அருந்த போதிய வசதி இல்லாததால் சமுதாய கூடத்தின் மேல் மாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று மனு அளித்தனர். அந்த கட்டிடத்தை பார்வை யிட்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி தருவ தாக கூறினார்.

    அதே போல் கன்னியா குமரி வில்லியம் பூத் பகுதிக்கு சென்ற விஜய்வசந்த் அங் குள்ள அந்தோணியார் குருசடியில் மாலை அணிவித்து வணங்கினார். பொதுமக்களிடம் அங்கு நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்தும் கேட்டறிந்தார். குடிதண்ணீர் விரைவாக கிடைக்க சிறப்பு நிலை பேரூராட்சியில் பேசி யிருப்பதாகவும் விரைவில் உங்கள் குறை தீர்க்கப்படும் என தெரிவித்தார். சரியான சாலை வசதி இல்லை அதை நிவர்த்தி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    பின்பு கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகத்துக்கு வருகை தந்த எம்.பி. விஜய்வசந்த் அவர்களை வார்டு உறுப் பினர்கள் சால்வை அணி வித்து வரவேற்பு அளித் தனர். அங்குள்ள அவைக் கூடத்தில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஸ்டீபன் தலை மையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது பேரூராட்சி உறுப்பினர்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொண்ட னர். சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைப்பது, சுற்றுலாத் திட்டங்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த குறை கேட்பின் போது விஜய்வசந்த் எம்.பி.யுடன் மாநில செயலாளர் சீனிவாசன், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செய லாளர் தாமஸ், வட்டார காங்கிரஸ் தலைவர் முருகே சன், நகர காங்கிரஸ் தலைவர் ஜவகர், துணைத் தலைவர் நெப்போலியன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர் கிங்ஸ்லி, லீபுரம் காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குமரி மாவட்ட மூன்று மீனவர்கள், இந்தோனேசிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
    • கைது நடவடிக்கைகளை தவிர்க்க கடல் சார்ந்த நாடுகளுடன் அரசு ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

    டெல்லி:

    கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கரை சந்தித்து தமிழக மீனவர்கள் மீட்பு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

    வெளிநாட்டு சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் துயரங்கள் குறித்து தெரிவித்த அவர், கடலில் மீன் பிடிக்க செல்லும்போது வழி தவறி அந்நிய நாட்டு கடல் எல்லைக்குள் செல்லும் மீனவர்களை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்வதை அவர் எடுத்துரைத்தார்.

    குறிப்பாக இந்தோனேசிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை அரசு தலையிட்டு விடுதலை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சிறையில் இருந்த போது ஒரு மீனவர் உயிரிழந்ததையும் மற்றும் மீனவர்களின் படகுகள் மற்றும் பொருட்கள் அந்த அரசின் வசம் இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

    இத்தகைய கைது நடவடிக்கைகளை தவிர்க்க கடல் சார்ந்த நாடுகளுடன் தூதரக ரீதியான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அத்தகைய பேச்சு வார்த்தைகளின் போது கடலோர பாராளுமன்ற தொகுதிகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து கருத்து கேட்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் மீனவர்கள் வேலைக்கு சேர்ந்தவுடன் அவர்களது பாஸ்போர்ட்களை வேலை செய்யும் நிறுவனங்கள் பிணையாக எடுத்துக் கொள்வதை சுட்டிக்காட்டிய விஜய்வசந்த் எம்.பி., மீனவர்கள் நாடு திரும்ப விரும்பும் போது பாஸ்போர்ட் கிடைக்காமல் தவிப்பதாக கூறினார்.

    குமரி மாவட்டத்தை சேர்ந்த எட்டு மீனவர்கள் ஓமன் நாட்டில் இத்தகைய சந்தர்ப்பத்தில் சிக்கி அலை கழிக்கப்படுவதையும் அப்போது அவர் தெரிவித்தார்.  இந்திய தூதரகங்கள் இந்த விஷயங்களில் தலையிட்டு மீனவர்களை உடனடியாக இந்தியாவிற்கு பத்திரமாக திருப்பி அனுப்ப வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

    • கடலோர பகுதிகளில் அரிய வகை மண் எடுக்க அனுமதி அளித்திருப்பதால் மீனவ மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
    • விஜய்வசந்த் எம்.பி. பேட்டி

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டண சலுகையை மத்திய அரசு ரத்து செய்தி ருப்பதால் பல பேர் அவர்கள் பயணத்தையே நிறுத்தியிருக் கிறார்கள். இதனால் ரெயில்வேத் துறைக்கு வருவாய் இழப்பு தான். சாலை பராமரிப்புக்காக நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பொன்விழா நினைவுத்தூணை அகற்றி யுள்ளனர். அந்த நினைவுத் தூணை மீண்டும் நிறுவ வேண்டுகோள் விடுத்துள் ளோம். அதற்கான முயற்சிக ளையும் அதிகாரிகளிடம் பேசி எடுப்போம். அது நினைவுச்சின்னம் அதை அகற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    அத்தியாவசிய பொருட் கள் மீது ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதற்கு மத்திய அரசு செவி கொடுக்காமல் இருக்கிறது.

    இந்த வாரம் அதற்கு ஒருவிடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அரிசி முதல் அனைத்து அத்தியாவ சிய பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி.வரி கொண்டு வருவது என்பது சராசரி மக்களை மேலும் பலவீனப்படுத்துவதாக உள்ளது. இதற்கு மத்திய அரசு பதில் சொல்லியாக வேண்டும்

    குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணியை மேற்கொள்ள மத்திய மந்திரியை சந்தித்து பேசி உள் ளோம். அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து மண் எடுக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த கடி தத்தை வைத்து புதிய டெண் டர் போட பரிந்துரை செய் யப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளது. 47 பி சாலை விரைவில் திறக்கப்படும்.

    இரட்டை ரெயில் பாதை பணியை விரைவுப்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தி யுள்ளோம். குமரி மாவட்டத்தில் 47 பி நாற்கர சாலையில் சுங்கச்சாவடி அமைத்துள் ளதை கண்டித்து மத்திய அர சுக்கு கடிதம் கொடுத்துள் ளோம். அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள்.

    குமரி மாவட்ட கடலோர பகுதி களில் அரிய வகை மண் எடுக்க அனுமதி அளித்திருப்பதால் மீனவ மக்கள் பாதிக்கப்படு வார்கள்.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேசி உரிய தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    நாகர்கோவில்:

    சென்னையில் விஜய் வசந்த் எம்.பி. தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா, முதன்மை தலைமை இயக்க மேலாளர் நீனு இட்டியேரா ஆகியோரை சந்தித்து மனு ஒன்று அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி வழித்தடத்தில் புதிய ரெயில் இயக்க வேண்டும், இரட்டை வழி ரெயில் பாதை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். கன்னியாகுமரியிலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரெயிலை இயக்க வேண்டும். ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். மேலும் அனந்தபுரி ரெயிலை நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • கன்னியாகுமரியிலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரெயிலை இயக்க வேண்டும்
    • ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்

    நாகர்கோவில்:


    விஜய்வசந்த் எம்.பி. அலுவலக செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-


    குமரி மாவட்டத்தில் நிலவி வரும் பல்வேறு ரெயில்வே பிரச்சினைகள் குறித்து நேற்று விஜய்வசந்த் எம்.பி. சென்னையில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா, முதன் மை தலைமை இயக்க மேலாளர் நீனு இட்டியேரா ஆகிேயாரை சந்தித்து மனு அளித்தார்.


    மனுவில் கன்னி யாகுமரி வழித்தடத்தில் புதிய ரெயில் இயக்க வேண்டும், இரட்டை ரெயில் பாதை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், கன்னியாகுமரியிலிருந்து வேளாங் கண்ணிக்கு புதிய ரெயிலை இயக்க வேண்டும், ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலைக் கன்னியா குமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கை களை விஜய்வசந்த் எம்.பி. முன் வைத்தார்.

    மேலும் அனந்தபுரி ரெயிலை நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    ×